நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் புஷ்பவனம் கிராமத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளியின் வீட்டிற்கே சென்று உரிய நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்.
வேதாரணியம் நவம்பர் 23 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் புஷ்பவனம் கிராமத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளியின் வீட்டிற்கே சென்று உரிய நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார வேதாரண்யம் வட்டம், புஷ்பவனம் கிராமம், அழகு கவுண்டர் தெருவில் வசித்து வரும் நாகவல்லி என்பவரின் மகன் பாலகிருஷ்ணன் என்பவர் உடல் ஊனமுற்று, மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத்திறனாளி ஆவார். அவரை கவனித்துக் கொள்ளும் வகையில் பாதுகாவலராக அவரது தாயார் உள்ளார். அவர்கள் வசித்துவரும் நிலையை அறிந்து கொண்டு, அவரது வீட்டிற்கு சென்று, அம்மையாருக்கும், அவரது மாற்றுத்திறனாளி மகனுக்கும் மாதாந்திர உதவி தொகைக்கான ஆனையிணையும், ஊன்றுகோல், தண்ணீர் மெத்தை சக்கர நாற்காலி போன்ற திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும் வளர்ச்சி இல்லாத அந்த மாற்றுத்திறனாளி மகனை காப்பகத்தில் சேர்த்து பயனடையும் வகையிலும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான ஆவணங்களை சரி பார்த்து வீடு கிடைப்பதற்கான வழிமுறைகளை செய்யும்படியும், குடும்பத்திற்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசு செலவில் அழைத்து சென்று செய்யுமாறும், ஒவ்வொரு மாதமும் மாதாந்திர உதவி தொகை வீட்டிற்கு சென்றடைய செய்ய வேண்டும் எனவும் உரிய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் மை.ஜெயராஜ பௌலின், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வ.சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

