வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உலக கழிவறை தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
வேதாரணியம் நவம்பர் 19
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உலக கழிவறை தினம் தூய்மை பாரத இயக்கம்
(ஊரகம் )சுகாதார ஓட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வு கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் எஸ். தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் த.சரவணன், ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், அஞ்சலக அலுவலர், மகளிர் குழுக்கள், தூய்மை பணியாளர்கள்,
சுந்தரம் அரசு உதவி தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் இரா.நீலமேகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு உறுதிமொழியும், விழிப்புண்ர்வு ஓட்டமும் நடைபெற்றது.


உலக கழிவறை தினம் நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாட குறிப்பேடு மற்றும் எழுதுபொருட்கள் வழங்கினார்கள். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

