அதிமுக நிறுவனர் கொண்டு வந்த தேர்தல் விதிமுறையை மாற்றக்கூடாது என்பதற்காகத்தான் ஓபிஎஸ் இரண்டாவது தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளார் என்று அதிமுக ஓபிஎஸ் அணியின் கழக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பி வி கே பிரபு வேதாரணியத்தில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார் .
வேதாரணியம் நவம்பர் 9
வேதாரண்யத்தில் நிருபர்களிடம் பேட்டி அளித்த அதிமுக ஓபிஎஸ் அணியின் கழக அமைப்புச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ள பி.வி .கே பிரபு மேலும் கூறுகையில்
நாகை மாவட்டத்தை சேர்ந்த என்னை அதிமுகவின் அமைப்புச் செயலாளராக நியமனம் செய்த கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
அதிமுக நிறுவனர் எம் ஜி ஆர் கொண்டு வந்த கட்சி தேர்தல் விதிமுறைகளை பாதுகாக்கவே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். எந்த சூழ்நிலையிலும் தொண்டர்களால் மட்டுமே கழக பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எம்ஜிஆர் கொண்டு வந்த கட்சி தேர்தல் விதிமுறைகளை மாற்றக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். எம் ஜி ஆர் கொண்டு வந்த கட்சி தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் இபிஎஸ் அணி செயல்படுகிறது இரண்டாவது தர்மயுத்தம் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி தற்போது கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் அனைத்து மாநில மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்து கட்சியின் பெரும் எழுச்சியும் தாக்கத்தையும் உருவாக்கி வருகின்றார் .அதன் அடிப்படையில் நாங்களும் கழகப் பணியாற்ற மீண்டும் தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவோம் என அதிமுக அமைப்பு செயலாளர் பி வி கே பிரபு தெரிவித்தார்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

