வேதாரணியத்தை அடுத்த கரியாப்பட்டினம் அடுத்துள்ள பிராந்தியங்கரை உம்பளச்சேரி செல்லும் வழியில் மடையான் பறவைகளை வைத்திருந்தவருக்கு அபராதம்
வேதாரணியம் நவம்பர் 7 திருச்சி வன மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரிக்காப்பாளர் யோகேஷ் குமார் மீனா ஆகியோரின் உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா.அயூப் கான் தலைமையில் பறவைகள் வேட்டை தடுப்பு சிறப்பு குழுவினர்கள் ராமதாஸ், வனவர், மகாலெட்சுமி, வனக்காப்பாளர்கள் ரணீஷ்குமார், ச இலக்கியா, வேட்டை தடுப்பு காவர்கள் நிர்மல்ராஜ், பாண்டியன் ஆகியோர்கள் பிராந்தியான் கரை உம்ளச்சேரி செல்லும் சாலையில் அலி அக்பர் த/பெ நைனா முகம்மது குரும்பன் குளம் – கட்டி மேடு, ஹாஜா அலாவுதீன் த/பெ சையது ஹமீது குடும்பன்குளம் – கட்டிமேடு பகுதிய சேர்ந்தவர்கள் மூன்று மடையான், இரண்டு வக்கா பறவைகள் கறி சமைக்க விலைக்கி வாங்கி வருகையில் அவர்களை பிடித்து விசாரணை செய்து இந்திய வனஉயிரினப்பாதுகாப்பு சட்டம் 1972ன்படி வழக்குபதிவு செய்து நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ் குமார் மீனா அறிவுரையின்படி நபர் ஒருவருக்கு தலா ரூ. 20000|-வீதம் இருவருக்கும் ரூ.40000/ இணக்க கட்டணம் வேதாரணியம் வன சரக அலுவலர் பா.அயூப்கான் அவர்களால் விதிக்கப்பட்டது.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

