வேதாரணியம் அக்டோபர் 28
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உப்பள தொழிலாளர்களின் பணி சுழல் தொடர்பான மாநில மனித உரிமைக் கழக ஆய்வு கூட்டம் கோடியக்காடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .
இக்கூட்டத்திற்கு மாநில மனித உரிமை கழக உறுப்பினர் திரு D. ஜெயச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் வேதாரணியம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, உப்புத்துறை சம்பந்தமான அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் இக்கூட்டத்தில் வேதாரணியம் உப்பள உற்பத்தி மைய தொழிலாளர்களின் பணிச்சூழல் மற்றும் பணியில் இருக்கும் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் திறந்த வெளியில் உப்பள உற்பத்தி பேக்கிங் செய்யும் சூழலில் பெண்களுக்கு அடிப்படை வசதி இல்லாத நிலையில் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் சூழல் ஆகியவற்றை குறித்த ஆய்வு கூட்டமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திரளான உப்பள தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாநில மனித உரிமை கழக உறுப்பினர் திரு D. ஜெயச்சந்திரன் அவர்களிடம் கூறினார்கள் .
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

