நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடியாளத்தூர் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தினையும், காக்கழனி ஊராட்சியில் புதிய ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்தையும் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் திறந்து வைத்தனர்.
நாகப்பட்டினம் அக்டோபர் 20 நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடியாளத்தூர் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தினையும், காக்கழனி ஊராட்சியில் புதிய ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்தையும் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் திறந்து வைத்தனர்.
புதிய நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் மற்றும் காக்கழனி ஊராட்சியில் புதிய ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் கொடியாளத்தூர் ஊராட்சியில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடம் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொடியாளத்தூர் ஆதமங்கலம்; மற்றும் குழப்பாடு ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 725 விவசாயிகள் பயன்பெறுவார்கள்.மேலும் இந்த பகுதிகளிலிருந்து வருடத்திற்கு சுமார் 352 ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டு சம்பா பருவத்தில் 42000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.


மேலும் இந்த ஆண்டு முதன் முறையாக குருவை பயிரிடப்பட்டு நெல் சாகுபடி செய்யப்பட்டு வருவதால் குருவை மற்றும் சம்பா இரண்டு பருவத்திற்கும் சேர்த்து சுமார் 65000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் காக்கழனி ஊராட்சியில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தினை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.55 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆத்மா வட்டார குழுத்தலைவர் பா.கோவிந்தராஜன், உறுப்பினர் பழனியப்பன், கீழ்வேளுர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், எல்.ராஜேஸ்வரி, கொடியாளத்துர் ஊராட்சிமன்றத் தலைவர் ரேவதி அய்யப்பன், காக்கழனி ஊராட்சிமன்றத் தலைவர் எஸ்.சிவக்குமார் அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

