நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவல கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் தலைமையில் இணைத்தலைவர் மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.இராமலிங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் செப்டம்பர் 29
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்ட ம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் தலைமையில் இணைத்தலைவர் மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.இராமலிங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் விபி.நாகைமாலி, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சித் தலைவர் ச.உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இந்த கண்காணிப்பு குழு கூட்டத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 4 முறை நடத்த வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மத்திய அரசால் அறிவிக்கப்படுகிற திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், செம்மையாக செயல்படுகிறதா, அளிக்கப்படுகிறதா, நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா, திட்டங்கள் உரிய காலத்தில் முடிக்கப்படுகிறதா, அதனுடைய திட்டங்களை கண்காணிக்கக் கூடிய அமைப்புதான் இந்த கண்காணிப்பு குழு. மத்திய அரசு வழங்குகின்ற திட்டங்கள் மக்களிடையே எந்த அளவிற்கு சென்றிருக்கின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.


இதற்கு பின்னர் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இக்கூட்டமானது நடைபெறும். பின்னர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களின் அனைத்துதுறை சார்பில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து தொடர்புடைய மாவட்ட அளவிலான அலுவலகங்களின் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக இந்த விழாவில் மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் ரூ.43,500 மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிள் , மடக்கு சக்கர சைக்கிள் மற்றும் திருமண நிதி உதவித்திட்டம் என 3 மாற்றுத்திறனாளிக்கும், ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் சார்பில் ரூ.10,000 மதிப்பீட்டில் 10 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.29,25,000 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு வங்கி கடன் உதவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ரூ.2,23,530 மதிப்பீட்டில் 12 பயனாளிகளுக்கு காளான் குடில்,வெண்டை,மா ஒட்டு, இடுபொருள், நிரந்தர பந்தல் சாகுபடி, வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறை சார்பில் ரூ.9,580 மதிப்பீட்டில் 11 பயனாளிகளுக்கு தென்னங்கன்று, கருப்புகவுனி நெல் விதை,செயல் விளக்க இடுபொருள் தொகுப்பு, பேட்டரி ஸ்பிரேயர், கைத்தெளிப்பான், தாட்கோ சார்பில் ரூ.13,18,085 மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கு லோடு வீகில் என மொத்தம் 43 பயனாளிகளுக்கு ரூ.45,29,695 மதிப்பீட்டிலுள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா மாவட்ட வருவாய் அலுவலர்கள் வி.ஷகிலா (நாகப்பட்டினம்), சோ.முருகதாஸ் (மயிலாடுதுறை), நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி, மயிலாடுதுறை மாவட்ட இணை இயக்குநர் எஸ்.முருகண்ணன், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

