தூத்துக்குடி,
செப்,18
சர்வதேச உரிமைகள் கழகம் தமிழகம் – புதுவை மாநில அனைத்து நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி தமிழ் சாலை ரோட்டில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்டத் தலைவர் ஆர்.பிரசில்லா தலைமையில் சர்வதேச உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன், சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் அசோக்குமார், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பாக
மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பேருந்து சேவை கிராமங்களுக்கும் விரிவுப்படுத்துதல், சொத்து வரி மற்றும் வீட்டு வரி திரும்ப பெறுதல், பெட்ரோல் டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் காவல்துறையின் பங்களிப்பு மற்றும் பாதுகாப்பை அதிகப்படுத்துதல் முக்கியமான இடங்களில் சிசிடிவி பாதுகாப்பு கேமராவை பொருத்துதல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் முறை ஏற்படுத்துதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி அல்லாத திறமை சார்ந்த விஷயங்களை ஊக்குவிக்க வேண்டும்.
கொரோனா காலகட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்துவது குறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் காலகட்டத்தில் சர்வதேச உரிமை கழகத்தின் சார்பாக தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வை ஏற்படுத்துவதற்கு உடனடியாக மனு வழங்குதல், தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறி நிகழ்வுகள் கண்டனம் தெரிவித்தும் அதை தடுக்க கூறியும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை மனு அனுப்புதல், இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்து விசாரணை நடத்த கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமை கழகம் கவுன்சிலுக்கு கோரிக்கை மனு அனுப்புதல்
மற்றும்,
தூத்துக்குடி சுற்று வட்டார பகுதியில் இயங்கி வரும் கடல் சார்ந்த உணவுகள் பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி செய்துவரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசுக் கழிவுகளை ரசாயன பொருட்களை கலந்து தொழிற்சாலை அருகில் உள்ள நீருடைகளில் கலக்க விடுகின்றனர் நீருடைகள் வழியாக கடலில் கலக்க விடப்படுகின்றது இதனால் கடல் வளம் பாதிக்கப்பட்டு மீனவர்கள் வாழ்வாதாரம் மற்றும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. இந்த மாதிரியான தொழிற்சாலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலை கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் சிறார்கள் போதை பொருட்கள் கஞ்சா மதுபானங்கள் போன்ற போதைப் பொருளுக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை தொலைத்து கொலை கொள்ளைகள் ஈடுபட்டு வருகின்றனர் இதனை போதை பொருள் தடுப்பு பிரிவு மிக கடுமையான முறையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி எல்லை அருகே அமைந்துள்ள சுங்கச்சாவடி வசூல் மையம் தூத்துக்குடி சுற்று புரம் பகுதியில் உள்ள மக்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது,மேலும் அதிகமான சுங்க சாவடி கட்டணம் செலுத்தி வருகின்றனர் இதனை தடுக்கும் பொருட்டு சுங்கச்சாவடிகளில் மாற்றி அமைக்குமாறு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த
நிகழ்ச்சியில், மாநில துணைத்தலைவர் காளிராஜ் பாண்டியன், மாநில இளைஞரணி செயலாளர் சிவா, தலைமைக் கழகச் செயலாளர் செந்தில்குமார், மாநில அமைப்பாளர் செந்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மாநில துணைப் பொதுச் செயலாளர் தீனதயாளன், மாநில துணைப் பொதுச் செயலாளர் சாமுவேல்பாண்டித்துரை, மாநில துணை அமைப்பாளர் சிவசுப்பிரமணியன், மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜெய்கணேஷ், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார்,சூரிய பாண்டி, மாநில இணை செயலாளர் நிர்மலா,மாவட்டத் தலைவர் பிரிசில்லா, மாவட்ட செயலாளர் பாஸ்கர்,
மாவட்ட துணைத் தலைவர்கள் பாலசுப்பிரமணி,
கோடீஸ்வரன், வெள்ளத்துரை, மாவட்ட செயலாளர் தேவேந்திரன்,( தூத்துக்குடி தொகுதி) மாவட்ட செயலாளர் ராமசாமி,( ஓட்டப்பிடாரம் தொகுதி) மாவட்ட செயலாளர் சந்தனமாரியம்மாள், ( கோவில்பட்டி தொகுதி) மாவட்ட செயலாளர்
வேல்முருகன்( விளாத்திகுளம் தொகுதி) மாவட்ட செயலாளர் ஷேக்முஹம்மது( திருச்செந்தூர் தொகுதி) மாவட்ட செயலாளர் காந்தி( ஸ்ரீ வைகுண்டம் தொகுதி) மகளிர் அணி மாவட்ட செயலாளர் பொம்மை நிக்கோலஸ் மணி( ஓட்டப்பிடாரம் தொகுதி) மீனவர் அணி மாவட்ட செயலாளர் மரிய அருள் பாரி ( ஓட்டப்பிடாரம் தொகுதி) அரசு ஊழியர் பிரிவு மாவட்ட செயலாளர் பொன் சித்ரா, மாவட்ட பொருளாளர் செளமியா (தூத்துக்குடி தொகுதி) மகளிர் அணி செயலாளர் முத்தம்மாள் (தூத்துக்குடி தொகுதி), சுய உதவிக்குழு பிரிவு மாவட்ட செயலாளர் ரத்னா, மகளிர் அணி மாவட்ட இணைச்செயலாளர் டெய்சி ராணி( ஓட்டப்பிடாரம் தொகுதி) இளைஞரணி மாவட்ட செயலாளர் வைகுண்ட ராஜா (தூத்துக்குடி தொகுதி) போக்குவரத்து அணி பிரிவு மாவட்டச் செயலாளர் இசக்கி ராஜா (தூத்துக்குடி தொகுதி) மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் சுதாமதி( ஓட்டப்பிடாரம் தொகுதி)2 வது வார்டு செயலாளர் லட்சுமி (தூத்துக்குடி தொகுதி)
மற்றும் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
போலீஸ் செய்தி
ஆத்தி முத்து.

