வேதாரண்யத்தில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வேதாரணியம் செப்டம்பர் 17
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வேதாரணியம் ராஜாஜி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தந்தை பெரியார் 17.09.1879 ல் பிறந்தார்.
தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்தை தொடங்கிய இந்திய சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் திராவிட இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். தந்தை பெரியாரின் இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

வேதாரண்யத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில்
வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ புகழேந்தி,
வேதாரணியம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். கே வேதரத்தினம் ,வேதாரண்யம் வர்த்தக சங்கத் தலைவர் எஸ் எஸ் தென்னரசு,
வேதாரணியம் திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன்,திராவிட கட்சியை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர் முருகையன்,கோவிந்தராஜுலு, மா.மீ அன்பரசு,
வேதாரணியம் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான
அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

