வேதாரணியம் சன்னதி கடற்கரையில் சர்வதேச கடலோர தூய்மை தினம் கடைப்பிடிக்கப்பட்டு கடற்கரையில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன.
வேதாரணியம் செப்டம்பர் 17
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் சன்னதி கடற்கரையில் சர்வதேச கடலோர தூய்மை தினத்தை
முன்னிட்டு கடற்கரையில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. முன்னதாக வேதாரணியம் கடலோர பாதுகாப்பு குழுமம் துணை கண்காணிப்பாளர் டி சுரேஷ் சர்வதேச தூய்மை தினத்தை பற்றி விளக்கினார்.அதைத் தொடர்ந்து வேதாரணியம் நகர் மன்ற ஆணையர் ஹேமலதா
தூய்மை தினத்தைப் பற்றிய உறுதிமொழியை படித்தார். உறுதிமொழியை வந்திருந்த அனைவரும் எடுத்துக்கொண்டனர்.அதைத்தொடர்ந்து கடற்கரையில் இருந்த காலி தண்ணீர் பாட்டில்கள், பழைய துணிகள்,மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் எடுத்து இந்த தூய்மை பணியில் ஈடுபட்ட அனைவரும் சுத்தப்படுத்தினர்.




இந்த தூய்மைப் பணியில் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் எஸ். செல்வராஜ்
முத்துப்பேட்டை ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் கடலோர பாதுகாப்பு காவலர்கள்,
தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த காவலர்கள்,
ஊர்க்காவல் படையினர்,
வேதாரணியம் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், வேதாரணியம் ரோட்டரி சங்க உறுப்பினர்கள்,வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள்,செம்போடை ஆர்.வி.பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணிதிட்ட மாணவ மாணவிகள்,தோப்புத்துறை அரசு மாதிரி மேனிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள்,வேதாரணியம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வேதாரணியம் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு வேதாரணியம் சன்னதி கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி கடற்கரையை தூய்மைப் படுத்தினர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

