நீதிபதி பீரித்தா, தலைமையில்
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம்: பஞ்.தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு!!
தூத்துக்குடி ஆகஸ்ட் 26
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நேற்று (25.08.2022) தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாமானது நடைபெற்றது. அதில் மாண்புமிகு தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/ சார்பு நீதிபதி திருமதி.M.பீரித்தா, M.L., அவர்கள் தலைமை தாங்கினார். நீதிபதி பீரித்தா
அவர்களை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் வரவேற்றார். இந்த கூட்டத்தில்
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.
மகேஸ்வரி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் திருமதி.சுபாஷினி, குழந்தை நலக் குழுவின் உறுப்பினர் திருமதி. சிதிரம்ஜான், மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார், செயலாளர் ஜெயக்குமார், வார்டு உறுப்பினர்கள் பாரதிராஜா மற்றும் ராணி, சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் பணியாளர்கள் நம்பி ராஜன் மற்றும் பால்செல்வம், 50 க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழவின் செயலாளர் தனது தலைமையுரையில இலவச சட்டத்திட்டத்தை பற்றியும், அரசு நலத்திட்டத்தை இலவச சட்ட உதவி மையம் மூலமாக எவ்வாறு பெறலாம் என்றும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், குழந்தை திருமணம் பற்றியும், சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இலவச சட்ட உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கூறினார். மேற்படி சட்ட விழிப்புணர்வு முகாமை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பணியாளர்கள் திரு.A.நம்பிராஜன், திரு.T.பால் செல்லம் ஆகியோர்கள் செய்திருந்தார்கள்.

