வேதாரண்யம் மேலவீதி தபால் அலுவலகம் முன்பு அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிகமான ஜிஎஸ்டி வரியை
விலைவாசி உயர்வை கண்டித்தும்
காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
வேதாரணியம் ஆகஸ்ட் 5
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் மேலவீதி தபால் நிலையம் அருகில் அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிகமான ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறக் கோரியும் விஷம் போல ஏறிவரும் விலைவாசி உயர்வையும் டீசல் பெட்ரோல் விலை உயர்வையும் கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. வி. ராஜேந்திரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இருசக்கர வாகனம், கேஸ் சிலிண்டர்,
அத்தியாவசியப் பொருள்கள், பால் பாக்கெட்டுகள் ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து
மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி வி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்
மற்றும் வட்டார தலைவர் சங்கமன் கோவிந்தராஜ், நகர தலைவர் அர்ஜுனன்,
முன்னாள் நகர தலைவர் வைரவன்,
காங்கிரஸ் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் ஆரோ. பால்ராஜ்,
முன்னாள் வட்டாரத் தலைவர் ஜெகநாதன்
மாவட்ட இலக்கிய அணி தலைவர் புலவர் கணேசன்,
காங்கிரஸ் நகர துணைத்தலைவர் ரபிக்,வட்டார காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சக்கரபாணி, வர்த்தக அணி மாவட்ட பொதுச்செயலாளர் அப்சி என்கிற அப்சல் உசேன் INTUC உப்பு தொழிலாளர் சங்க துணைத் தலைவர் தங்கமணி,பொருளாளர் தாயுமானவன், வெங்கட்,
இளைஞரணி சட்டமன்றத் தலைவர் ஆப்கான்,
மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராணி, வட்டார மகளிரணி தலைவர் மல்லிகா,
நகர மகளிர் அணித் தலைவர் ரத்னமாலா, மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த தமயந்தி,
வேதாரணியம் நகர்மன்ற உறுப்பினர் தங்கதுரை,
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வே. கணேசன்,
மற்றும் அனைத்து காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகளும் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

