நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிதிட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்தம்புராஜ் இன்று ஆய்வுமேற்கொண்டார்.
கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் ஒக்கூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் நடைபெறும் வீடுகட்டும் கட்டுமான பணிகளையும்இ அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.36 இலட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டடம் கட்டுமான பணிகளையும்இ மற்றும் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் குளம் வெட்டுதல் போன்ற பணிகள் முடிவுற்றதையும்இ மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதிதிட்டத்தின் கீழ் ஆணைமங்கலம் ஊராட்சியில் ரூ.28.94 இலட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையகட்டடம் கட்டுமான பணிகளையும்இ அகரகடம்பனூர் ஊராட்சியில் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் நேருநகர் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும்இ எரவாஞ்சேரி ஊராட்சி மற்றும் இராதாமங்கலம் ஊராட்சியில் தலா ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுமான பணிகளையும்இ பட்டமங்கலம் ஊராட்சியில் ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கடை கட்டும் கட்டுமான பணிகளையும்இ 75-அனக்குடி ஊராட்சியில் ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுமான பணிகளையும்இ ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கடை கட்டும் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வுசெய்தார்.

அதனைத் தொடர்ந்து எரவாஞ்சேரி ஊராட்சியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கடை கட்டும் கட்டுமான பணிகளையும்இ இராதாமங்கலம் ஊராட்சியில் 15வது நிதிகுழு மானியநிதியின் கீழ் ரூ.4.55 இலட்சம் மதிப்பீட்டில் உரக்குழி சுற்றுசுவர் அமைக்கும் பணி முடிவுற்றதையும்இ அமுதகுளம் வெட்டும் திட்டத்தின் கீழ் 75- அனக்குடி ஊராட்சி; மற்றும் வலிவலம் ஊராட்சி காருக்குடி கிராமத்தில் தலாரூ.3.44 இலட்சம் மதிப்பீட்டில் புதியகுளம் அமைக்கும் பணி முடிவுற்றதையும் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
இந்த ஆய்வின் போது கீழ்வேளுர் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன் எல்.ராஜாகோபால் செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தித் தொகுப்பு டாக்டர். எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

