வேதாரண்யத்தில் சதுரங்க விளையாட்டு போட்டி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.
வேதாரணியம் ஜூலை 28
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 44 வது சதுரங்க விளையாட்டு போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற இருப்பதால்
அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கமலா அன்பழகன் வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ. புகழேந்தி வேதாரணியம் கோட்டாட்சியர் பவுலின் ஜெயராஜ் வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா
வேதாரணியம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து அரசாங்க துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.முதலில் மாலை ஆறு முப்பதுக்கு வேதாரண்யம் கடற்கரையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும் மற்றும் கடற்கரையில் புதிதாக கட்டப்பட்ட தியான மண்டபம் திறப்பு விழாவை மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு திறந்து வைத்தார்கள். அதைத்தொடர்ந்து வேதாரணியம் நகரத்தில் காந்தி பூங்காவில் சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான கண்காட்சியும் நடைபெற்றன. மாலை ஏழு முப்பது மணிக்கு வேதாரணியம் ராஜாஜி பூங்காவில் சதுரங்க விளையாட்டுப் போட்டி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு சம்பந்தமான கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமை ஏற்கவும் வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா வரவேற்புரை ஆற்றவும் வருவாய் கோட்டாட்சியர் பவுலின் ஜெயராஜ் வாழ்த்துரை வழங்கவும் மாவட்ட வருவாய் அலுவலர் நாகப்பட்டினம் முன்னிலை வைக்கவும்
பரதநாட்டியம், கவிதை வாசிப்பு ,விழிப்புணர்வு நடனம், விழிப்புணர்வு பேச்சு,குரூப் டான்ஸ்,
பட்டிமன்றம்
ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வகையான கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களை சிறப்பிக்கும் பொருட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். வேதாரணியம் வருவாய் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் நன்றி உரையாற்றினார்.இந்த நிகழ்வுகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

