வேதாரண்யத்தில் 44 செஸ் ஒலிம்பியாட் தீப தொடர் ஓட்டத்தை அகஸ்தியம்பள்ளி உப்புசத்தியாக கிரக நினைவு ஸ்தூபியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
வேதாரண்யம் ஜூலை 26
நாகை மாவட்டம் வேதாரண்யத்திலிருந்து நாகை வரை செல்லும் 44 செஸ் ஒலிம்பியாட் தீப தொடர் ஓட்டத்தை அகஸ்தியம்பள்ளி உப்புசத்தியாக கிரக நினைவு ஸ்தூபியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நாகை வரை செல்கின்றனர் .மேலும் இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை பல்வேறு ஊர்கள் வழியாக செல்லும்
செஸ் ஒலிம்பியாட் தீப தொடர் ஓட்டத்தை பல்வேறு இடங்களில் மக்கள் கூடிநின்று வரவேற்பு அளித்து வருகின்றனர்.இந்த 44வது செஸ் ஒலிம்பியாட் தீப தொடர் ஓட்டம் நாகப்பட்டினத்தில் இன்று மாலை நிறைவுபெறும்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

