வேதாரண்யத்தை அடுத்த தோப்புத் துறை துரெளபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா .
வேதாரணியம் ஜூலை 26
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்ததோப்புத் துறை துரெளபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீமிதித்தனர். முன்னதாக சுவாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.




இந்த தீமிதி திருவிழாவில் மதநல்லிணக்கமாக தோப்புத்துறை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

