வேதாரண்யத்தில் பள்ளி குழந்தைகளிடம் அவர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் மூலம் விழிப்புணர்வு.
வேதாரணியம் ஜூலை 19.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் பள்ளி குழந்தைகளிடம் அவர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுதல் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு மாநில குழந்தை உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்
சரண்யா ஜெயக்குமார் வருகை புரிந்து வேதாரணியம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஒன்பது பள்ளிகளுக்கு வருகை புரிந்து மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
காலை மணி 9 முதல்
ஆயக்காரன்புலம் ஆர். வி. எஸ் .பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
வாய்மேடு இலக்குவனார் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி,வேதாரணியம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேதாரணியம் வடமழை ரஸ்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ,தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி,வேதாரண்யம் குருகுலம் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் குருகுலம் குழந்தைகள் இல்லம்
ஆகிய பள்ளிகளில் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.


மேலும் ஆயக்காரன்புலம் 2 ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.மேலும் தமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் சரண்யா ஜெயகுமார் கூறும்போது குழந்தைகளுக்கு விழிப்புணர்வு என்பது அவர்களுக்கு அவசியமாக தேவைப்படும் ஒன்று
குழந்தைகளின் உரிமைகள் என்னென்ன அவர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் என்னென்ன என்பது அவர்களுக்கு தெரிய வேண்டும் அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது அந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் அதை விட்டுவிட்டு தற்கொலை ஒன்றே அதற்கு தீர்வு என்பது கூடாது என்பதை விளக்க தமிழ்நாடுஅரசு மாநிலமெங்கும் இதுபோல ஒரு விழிப்புணர்வு கூட்டங்களை பள்ளியில் நடத்துகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யத்தில் 9 பள்ளிகளில் இதுபோல விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துவதற்காக தான் சென்னையில் இருந்து வந்ததாக கூறினார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

