வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனை கட்டிட மேல்கூரையின் சிமெண்ட் காரை விழுந்து ஒருவர் காயம் .
வேதாரணியம் ஜூலை 14
நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் காரை விழுந்ததில் தென்னடார் ஊராட்சியைச் சேர்ந்த ரேவதி என்பவர் காயமடைந்தார் .கடந்த 2008 ஆம் ஆண்டு இக்கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டது. தற்போது பலமுறை இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் விழுவதாக தெரிகிறது. நேற்று இரவு இக்கட்டத்தின் சிமெண்ட் காரை விழுந்தது. இதில் ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இக்கட்டிடம் கட்டப்பட்டு 14 ஆண்டுகளிலேயே இது போன்ற நிகழ்வு நோயாளிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

