கனிமொழி எம்.பி. யின் தாய் உள்ளம்!!
பொதுமக்கள் சார்பில் குவிந்த பாராட்டுக்கள்!!
தூத்துக்குடி,
ஜூலை, 11
தூத்துக்குடியில் தமிழர்களின் கலை,மண் சார்ந்த வாழ்வியல் முறை, பாரம்பரிய உணவு வகைகளை நினைவு கூறும் விதமாக கனிமொழி எம்.பி. முன்னெடுப்பில் நெய்தல் கலை விழா கடந்த 7-ந் தேதி முதல் 10 ம் தேதி வரை நடைபெற்றது.
நேற்று 4-வது நாள் நெய்தல் கலை விழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.
இந்த 4 நாட்களும்
நெய்தல் விழா நிகழ்ச்சிகளை காண்பதற்கு
கூட்ட அரங்கிற்கு மக்கள் கூட்டம்
கூட்டமாக வந்து நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
நேற்றும், நேற்று முன்தினம் ஆகிய இரண்டு நாட்களும்
கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது
4-வது நாள் நெய்தல் கலை விழா நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றதை முன்னிட்டு
இறுதி நாளான
நேற்று மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்தன
நெய்தல் விழாவின் நிறைவு நாளான நேற்று வந்திருந்த குடும்பத்தில் ஒருவர் தங்களின் குழந்தையை தவற விட்டனர். அந்தக் கூட்டத்தில் சிக்கி தவித்த குழந்தை தாயை தேடி கதறி அழுதது உடனே விழா மேடையில் குழந்தையை தவறவிட்டவர்கள் மேடைக்கு வரவும் என தொடர்ந்து மைக் மூலம் வலியுறுத்த கனிமொழி எம்பி உத்தரவு பிறப்பித்த நிலையில் விழா குழுவினர் குழந்தையை தவறவிட்ட பெற்றோர் முறையான அடையாளம் காட்டி
குழந்தையை அழைத்து செல்லலாம் என்று தொடர்ந்து கலை குழுவினர் மூலம் அறிவுறுத்தப்பட்டு வந்தது. இருந்தாலும் அந்த குழந்தை தனது அம்மாவிடம் செல்ல வேண்டுமென கதறி அழுதது இதனைப் பார்த்த கனிமொழி கருணாநிதி
எம்.பி. அவர்கள்
தாயுள்ளத்தோடு
அந்த குழந்தையை தனது மடியில் வைத்திருந்து உங்கள் அம்மாவிடம் உன்னை கொண்டு போய் சேர்க்கிறேன் என்று மனிதநேயத்தோடு தனது மடியில் வைத்து குழந்தையை ஆறுதல் படுத்திய நிகழ்வு கண்டு விழாவை காண வந்த ஒட்டுமொத்த பொதுமக்களும் கனிமொழி எம்.பி. யின் தாய் உள்ளத்தையும், மனிதநேயத்தையும் மனதார பாராட்டினார்கள்.
அதன் பிறகு சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு தனது தாயும் தந்தையும் விழா மேடைக்கு வந்து
கனிமொழியி எம் பி யின் மடியில் வைத்திருந்த தங்கள் குழந்தையை வாங்கி
கொண்டு கனிமொழி எம்பிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்
கனிமொழி எம்.பி.
யின் தாய் உள்ளத்தை விழாவிற்கு வருகை தந்த பெண்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மனதார
பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

