ஓசூர்
படுதேப்பள்ளி கிராமத்தில் 5 லட்சம் மதிப்பீட்டில்
சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு பூமிபூஜை:
சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் துவக்கி வைத்தார்.
ஓசூர், ஜூலை, 8
ஓசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் ஒன்றியம் படுதேப்பள்ளி ஊராட்சி படுதேப்பள்ளி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2021- 2022 ஆண்டில் சுமார் 5 இலட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு பூமிபூஜை செய்து பணிகளை மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது
உடன் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, ரமேஷ், துணை செயலாளர் வீரபத்திரப்பா, ஒன்றிய குழு உறுப்பினர் கோபால், ஹரிஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர், பாகலூர் ஆனந்த், அரசு அதிகாரிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

