மாப்பிள்ளையூரணி காந்திநகர் சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா:
பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் கலந்து கொண்டு இன்னிசை கச்சேரியை துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட காந்தி நகர், வெற்றிநகரில் அனைத்து சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சந்தனமாரியம்மன் கோவில் வருஷாபிஷேகம், மற்றும் கொடைவிழாவையொட்டி நடைபெற்ற இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் கலந்துகொண்டு கச்சேரி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் தெய்வங்கள் அனைவருக்கும் துணை நிற்கும் இந்த பகுதி மட்டுமின்றி மாப்பிள்ளையூரணி பகுதி முழுவதும் வளர்ச்சியடைவதற்கும் எந்த நேரமும் உங்களோடு இருந்து கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உழைப்பேன் என்று தெரிவித்தார்
இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்றார். கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் இளைஞர் அணியினர் மாப்பிள்ளையூர்ணி பஞ்சாயத்து தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து பொன்னாடை போர்த்தினர்.
விழாவில் பஞ்சாயத்து துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, திமுக நிர்வாகிகள் மாரியப்பன், வேல்ராஜ், கணேசன், சுதாகர், கோவில் தலைவர் என்.மாரிமுத்து, துணைத்தலைவர் எஸ்.மாரிமுத்து, செயலாளர்கள் ஜெயகணேஷ், பாரதிராஜா, ரமேஷ், பொருளாளர் சாந்தகுமார், இளைஞர் அணி பாலமுருகன், முருகேசன், மாரிச்செல்வம், உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
எம். ஆத்திமுத்து
போலீஸ் செய்தி நியூஸ்

