வேதாரண்யத்தில் வளர்ப்பு மீன் விற்பனை கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு கண்காட்சிக்கு வேதாரணியம் நகராட்சி நிர்வாகம் தடை
வேதாரணியம் ஜூலை 4
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வளர்ப்பு மீன் விற்பனை கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு கண்காட்சி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.
வேதாரணியம் சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து இந்த கண்காட்சியை பார்த்து வருகின்றனர். பல வண்ண நிறங்களில் உள்ள மீன்களை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வாங்கி சென்றனர்.
மேலும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று வேதாரணியம் நகராட்சி நிர்வாகத்தினர் அந்த
பகுதிக்குச் சென்று
வளர்ப்பு மீன் விற்பனை கண்காட்சி மற்றும் பொழுது போக்கு கண்காட்சிக்கு தடை விதித்தனர்.
இன்று இந்த பொருட்காட்சிக்கு கூட்டம் கூட்டமாக வந்த பொதுமக்கள் பொருட்காட்சி பகுதி மூடப்பட்டிருந்ததால் சோகத்துடன் கலைந்து சென்றனர்.


செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .

