சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சான்றிதழ் வழங்கி பாராட்டு!!
தூத்துக்குடி
,ஜூலை,3
சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடியில் சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 24.3.2022 ஆம் ஆண்டு பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் யார் என்று தெரியாமல் இருந்த வந்த
நிலையில், இவ்வழக்கில் தீவிரமாக புலன் விசாரணை மேற்கொண்டு துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகள் 2பேரை கைது செய்து சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி ரூரல் தனிப்படை உதவி ஆய்வாளர் நம்பிராஜன், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர், தனிப்பிரிவு காவலர் கலைவாணன் ஆகியோர்களுக்கு நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
சிப்காட் எஸ் ஐ சங்கர் தனது அதிரடி நடவடிக்கை மூலம் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி, இடம் சிறப்பான பணிகள் செய்தமைக்காக பல்வேறு பாராட்டு விருதுகள் பெற்றுள்ளார்
எஸ் ஐ சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில்
சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட நற்சான்றிதழை டிஜிபி சைலேந்திரபாபு அவர்களிடம் எஸ்ஐ சங்கர் பெற்றுக் கொண்டார்
எஸ் ஐ சங்கர் காவல் ஆய்வாளராக தற்போது
பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு:
எம் . ஆத்தி முத்து
போலீஸ் செய்தி


