இன்று விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புகையிலை மற்றும் குட்கா ஒழிப்பு சம்பந்தமாக ரெய்டு நடைபெற்றது.
இன்று நடைபெற்ற ரெய்டில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விளாத்திகுளம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கனிராஜ் மகன் ஜெயராஜ் (வயது 48) என்பவருக்குச் சொந்தமான குடோனை சோதனை செய்தபோது (Ganesh புகையிலை -25 மூடை, Bullet Rani-10 மூடை, Vimal-3 மூடை ) ரூபாய் 3,50,000/- மதிக்கத்தக்க மொத்தம் சுமார் 600 கிலோ புகையிலைப் பொருட்கள் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் அவர்களது தலைமையிலான காவலர்கள் மூலம் கைப்பற்றப்பட்டது.மேலும் புகையிலைப் பொருள்களை வைத்திருந்த ஜெயராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.


