வேதாரண்யத்தில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மூலிகை தோட்டம் அமைப்பு
வேதாரணியம் ஜூன் 22
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மூலிகைத்தோட்டம் அமைக்கும் பணியை 21.06.2022 ல் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்
தொடங்கி வைத்தார்.
வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டதாகும்.வட்டாட்சியர் அலுவலகம் முன் பகுதியில் உள்ள இடங்களை சுத்தம் செய்து அப்பகுதியில் பாரம்பரிய மூலிகை தோட்டம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். மூலிகைச் செடிகள், மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

மூலிகைகளான கற்றாழை, மணத்தக்காளி, சிறுகுறிஞ்சான், தும்பை, தூதுவளை உள்ளிட்ட 60 வகையான மூலிகைச் செடிகள் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வேதாரணியம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ,நகராட்சி ஆணையர் ஹேமலதா ,
வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ புகழேந்தி ,ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன்
மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .


