வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி
வேதாரண்யம் ஜூன் 21
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மண்டல கலங்கரை விளக்கம் மற்றும் விளக்கு கலங்கள் துறை இயக்குனர் கே கார்த்திக் செஞ்சுடர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கோடியக்கரை கலங்கரை விளக்கத்தில் யோகாசனம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் கோடியக்கரை கலங்கரை விளக்க அலுவலர்கள் மற்றும் கோடியக்கரை இந்திய விமானப்படை அலுவலர்கள் மற்றும் வேதாரண்யம் AKRM பேட்மிட்டன் கிளப் உறுப்பினர்கள் மற்றும்
கோடியக்கரை அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு யோகாசன பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சியும் கற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வை கலங்கரை விளக்க பொறுப்பாளர்கள் எஸ் பழனிச்சாமி வரவேற்று துவக்கி வைத்தார்.



தொடர்ந்து இந்திய விமானப்படை அலுவலர் சதீஷ்குமார் சிறப்புரையும் வேதாரணியம் ராஜேந்திரன் பிஎஸ்என்எல் ( Rtd) வாழ்த்துரை யும் யோகாசன ஆசிரியர் எபோனி ராஜ் பயிற்சியும் வழங்கினார்கள் .விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் யோகா பற்றிய விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது. இறுதியாக கலங்கரை விளக்க உதவி பொறுப்பாளர் டி ரோஹித் நன்றியுரை ஆற்றினார்.
கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .


