நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாகை ஜூன் 20
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 188 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுர், திருக்குவளை வட்டத்தை சேர்ந்த சுந்திரவள்ளி மற்றும் சண்முகபிரியா என்பவர்க்கு தையல் இயந்திரத்தையும், கீழ்வேளுர் வட்டத்தை சேர்ந்த வினோதினி என்பவர்க்கு மாவட்ட ஆட்சியரின் தன்விருப்பநிதியிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையையும், திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் இரண்டுதிருநங்கைகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டையினையும் 11 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையினையும், 10 திருநங்கைகளுக்கு புதிய வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தினையும், ரீட்டா என்ற திருநங்கைக்கு ஓய்வுதியத்திற்க்கான ஆணையினையை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் ராஜன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், செய்தி மக்கள் தொடர்புஅலுவலர் தனபால் மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் உட்பட அரசுஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்


