நாகை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாகை ஜூன் 6
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது.
இதில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 178 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்டமனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டா் அருண்தம்புராஜ் அறிவுறுத்தினார்.


பின்னர் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம, வெள்ளப்பள்ளம் ஊராட்சி வானவன்மகாதேவி கிராமத்தை சேர்ந்த சங்கீதா என்பவர்க்கு சுயதொழில் செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் தன் விருப்ப நிதியிலிருந்து தையல் இயந்திரத்தையும், உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்பாட்டு செயல் திறனுக்காக வனம் தன்னார்வத் தொண்டு அமைப்புக்கும் மற்றும் அருள்ஜோதி என்பவர்க்கும் பசுமை முதன்மையாளர் விருதும், தலா ரூ1 லட்சம் வீதம் இரண்டு லட்சத்திற்கான காசேலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரகன்றுகளை நட்டு தொடங்கி வைத்து, பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு மஞ்சள் பையுடன் கூடிய 15 வகையான மரகன்றுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் ராஜன், மாவட்ட ஆட்சியர் நேர்முகஉதவியாளர் (பொது) ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் மற்றும் மாற்றுத் திறனாளி நல அலுவலர் சீனிவாசன், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சதிஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

