காவல்துறை மாநில அளவிலான வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஒத்திவாக்கத்தில் ஜனவரி 28 முதல் 30 வரை 3 நாட்கள் நடைபெற்றது.
வடக்கு மண்டல காவல்துறை அணி சார்பில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் தலைமையில் போட்டியில் பங்கேற்றனர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் மற்றும் ஆயுதப்படை காவலர் வினோத்குமார் ஆகியோர் இணைந்து கார்பன் துப்பாக்கி சுடும் பிரிவில் முதலிடத்தை பெற்று கேடயம் பெற்றனர்.

ஆயுதப்படை காவலர் வினோத்குமார் தனிநபர் கார்பன் துப்பாக்கி சுடுதலில் 2 தங்கப் பதக்கம், 1 வெள்ளி பதக்கம், 1 வெண்கலப் பதக்கம் பெற்றார்.ரெட்டிச்சாவடி காவல் நிலையம் காவலர் ராஜகோபால் அவர்கள் தனிநபர் இன்சாஸ் துப்பாக்கி சுடும் பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றார். பதக்கம் பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வாழ்த்து தெரிவித்தார்.

