சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்- வேதாரண்யத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலையிட்டு மரியாதை.
வேதாரணியம் ஏப்ரல்14
சட்ட மேதை டாக்டர்
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நாகை மாவட்டம் வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில்
திமுகவைச் சேர்ந்த வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ. புகழேந்தி மற்றும் திமுக தொண்டர்கள் மாலையிட்டு மரியாதை செய்தனர். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தங்க. வரதராஜன் ,
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.வி. ராஜேந்திரன் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்தினர்..
அனைத்திந்திய அண்ணா திமுகவைச் சேர்ந்த
வேதாரணியம் நகர்மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் நமச்சிவாயம் மற்றும் கட்சி தொண்டர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்தினர் .
கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மாலி மற்றும் மாவட்ட பொறுப்பாளர் மாரிமுத்து மற்றும் சிபிஎம் தொண்டர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்தினர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் மற்றும் கட்சித் தொண்டர்கள் மாலையிட்டனர். விடுதலை சிறுத்தை கட்சியின் செந்தில் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

