சிக்கல் பகுதியில் நடந்த வீட்டின் கதவை உடைத்து திருடிய வழக்கில் நான்கு எதிரிகள் கைது : 20 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி பொருட்கள், பணம் மீட்பு
நாகை மார்ச் 29
கீழ்வேளுர் காவல் சரகம், சிக்கல் வடக்கு வீதியில் மல்லிகா என்பவர் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்து தங்க, வெள்ளி பொருட்கள், டிவி, வெளிநாட்டு பணம் திருடு போனது.


இது குறித்து மல்லிகா கீழ்வேளுர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நாகை காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் , கீழ்வேளுர் வட்ட காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையில் காவலர்கள் மாதவன், அசோக் மற்றும் தினேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி சந்தேகத்திற்கு இடமான நிலையில் இருந்த கீரைக்கொல்லைத்தெருவைச் சேர்ந்த கார்த்தி (35) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட நாகப்பட்டினம் செக்கடி தெரு கொரசேகர் (50), சிவன் தெற்குவீதி தளபதி (எ) காளிதாஸ் (49), வடக்கு நல்லியான்தோட்டம் ஒச்சி (எ) பிரகாஷ் (31) ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தததின் பேரில் எதிரி கார்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து, மற்றவர்களை தேடி வந்த நிலையில் கடந்த 23ம் தேதி கொரசேகர் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததால், நீதிமன்ற உத்தரவு பெற்று கடந்த 25ம் தேதி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்து தளபதி (எ) காளிதாஸ் மற்றும் ஒச்சி பிரகாஷ் ஆகியோரை கைது செய்து சுமார் 20 லட்சம் மதிப்புள்ள களவு போன தங்க, வெள்ளி நகைகள், பணம் மீட்கப்பட்டன. பின்னர் கொரசேகர் மற்றும் ஒச்சி பிரகாஷ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை மாவட்ட எஸ்.பி ஜவஹர் மற்றும் காவல் உயர்அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்.

