உலக நுகர்வோர் தின விழா
வேதாரண்யம் மார்ச் 20
வேதாரண்யம் பாரதிய வித்யாலய பள்ளி வளாகத்தில் வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு சார்பில் உலக நுகர்வோர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் வீரசுந்தரம் தலைமை தாங்கினார். பொருளாளா் மாரிமுத்து வரவேற்றார். துணைத் தலைவர்கள் கல்வியாளர் சாமிநாதன், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த குடிமக்கள் பேரவை தலைவா் பக்கிரிசாமி, ரோட்டரி சங்கத் தலைவர் புயல் குமார், அரிமா சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், சரக காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார். கவிஞர் ராஜேந்திரன் தமிழ் கவிதை பாடினார். தேசிய நல்லாசிரியா்கள் வைரக்கண்ணு, செல்வராசு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

