சர்வதேச மகளிர் தின விழா- வேதாரண்யத்தில் பெண் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம் .
வேதாரணியம்
மார்ச் 08
ஆண்டுதோறும் மார்ச் 8 ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற சர்வதேச மகளிர் தின விழாவில் வேதாரணியம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் முருகவேல் தலைமை வகித்தார். வட்டாட்சியர் ரவிச்சந்திரன், துணை வட்டாட்சியர் வேதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேதாரணியம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலர்விழி கேக் வெட்டி கலந்து கொண்ட அனைத்து மகளிருக்கும் வழங்கினார்.

இந்நிகழ்வில் வேதாரண்யம் காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரியா , வாய்மேடு காவல்நிலைய ஆய்வாளர் கன்னிகா மற்றும் பெண் காவலர்களும் கலந்து கொண்டனர். வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் , நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக ங்களில் பணிபுரியும் பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து மகளிருக்கும் , காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார் .
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

