தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது – 1 கிலோ கஞ்சா பறிமுதல்*
*♻️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகரம் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் நேற்று (26.02.2022) ரோந்து பணியில் ஈடுபட்ட போது மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பள்ளி அருகில், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த மகேந்திரன் (19), த/பெ. சுப்பிரமணியன், நந்த கோபாலபுரம், தூத்துக்குடி என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக மேற்படி போலீசார் மகேந்திரனை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 060 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.*
*♻️இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*

