நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக தலைஞாயிறு பேரூராட்சியில் 84 சதவீத வாக்குப்பதிவு.
நாகப்பட்டினம்
பிப் 19
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது . அதில் நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் இரண்டு நகராட்சிகளுக்கும், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, திட்டச்சேரி ஆகிய நான்கு ஊர்களுக்கு பேரூராட்சி தேர்தலும் நடைபெற்றது. இதில் நாகை நகராட்சியில் 63.73 சதவீத வாக்காளர்களும், வேதாரண்யம் நகராட்சியில் 75.51 சதவீத வாக்காளர்களும் வாக்களித்தனர்.
கீழ்வேளூர் பேரூராட்சியில் 74.70 சதவீத வாக்காளர்களும், வேளாங்கண்ணி பேரூராட்சியில் 81.85 சதவீத வாக்காளர்களும், தலைஞாயிறு பேரூராட்சியில் 83.91 சதவீத வாக்காளர்களும், திட்டச்சேரி பேரூராட்சியில் 66.09 சதவீத வாக்காளர்களும் வாக்களித்துள்ளனர். மாவட்டத்தில் தலைஞாயிறு பேரூராட்சியில் 10196 வாக்காளர்களில் 8555 வாக்காளர்கள் வாக்களித்து நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக 83.91 சதவீதம் வாக்குபதிவு பதிவானது .நாகை மாவட்டத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 22 ஆம் தேதி நாகப்பட்டினம் இ.ஜி.எஸ் .பிள்ளை கல்லூரியில் நடைபெற உள்ளது.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

