தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தை சார்ந்த பத்திரிகையாளர்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.
தூத்துக்குடி, பிப்ரவரி,19.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தலுக்கு இன்று காலை 7 மணி முதல் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலையிலிருந்து பொதுமக்கள், பெண்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமை நிறைவேற்றி வருகிறார்கள். அதுபோல் தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் தங்கள் ஊடகப் பணிகளை தேர்தல் நேரத்தில் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டே ஒருபுறம்
தங்கள் ஜனநாயக கடமையான வாக்குப்பதிவை
தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தை சார்ந்த பத்திரிகையாளர்கள் செய்து விட்டு
தூத்துக்குடி பத்திரிகை மன்ற அலுவலகத்தில் ஒன்று கூடினார்கள். தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் ஆகிய நாங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி விட்டோம். பொதுமக்களாகிய தாங்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என வேண்டுகோள் வைத்தனர். இந்த நிகழ்வின்போது தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தின் செயலாளர் இசக்கி ராஜா, மன்றத்தின் கவுரவ ஆலோசகர் மூத்த பத்திரிகையாளர் அருண், மன்றத்தின் முன்னாள் செயலாளரும் செயற்குழு உறுப்பினருமான அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர்கள் எம். ஆத்தி முத்து, முரளி கணேஷ், முத்துராமன், மன்ற உறுப்பினர்கள் தமிழன் ரவி, இருதயராஜ், மாணிக்கம், சாதிக் மற்றும் பலர் இருந்தனர்.

