நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- ஓரடியம்புலம் பள்ளியில் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் வாக்குப்பதிவு.
வேதாரணியம்
பிப் 19
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சிக்குட்பட்ட ஓரடியம்புலம் 13-வது வார்டு வாக்குச்சாவடியில் முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ. எஸ். மணியன் வாக்கு செலுத்தினார் . இன்று நடைபெற்று வரும் நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேதாரண்யம் நகராட்சி, தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பதட்டமான வாக்குச்சாவடிகள் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
செய்தியாளர்.

