அரியலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர், காணாமல் போன குழந்தைகள்,பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சாலையோரம் சுற்றித்திரியும் குழந்தைகள் ஆகியோரை மீட்க புன்னகையை தேடி என்ற சிறப்பு குழுவின் மூலம் மீட்டு அக்குழந்தைகளுக்கு பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு அளிக்கும் வகையில் இன்று அரியலூர் மாவட்ட பேருந்து நிலையத்தில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்னா மற்றும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன் தலைமையில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தர மூர்த்தி முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து புன்னகை தேடி இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் போது ,மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சுமதி அவர்கள், உதவி ஆய்வாளர் திருமதி.அமரஜோதி அவர்கள்,அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தர மூர்த்தி அவர்கள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்

இதை தொடர்ந்து மாவட்ட கூடுதல் கூடுதல் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி அவர்கள் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.சுமதி அவர்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள் அரியலூர் நகர பகுதியில் உள்ள கடைகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளனர் என்பதை ஆய்வு செய்தனர்.

