வேதாரண்யம் பகுதி கனமழை – அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம், உப்பு உற்பத்தி பாதிப்பு
வேதாரண்யம் பிப் 12
வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மன்னார் வளைகுடா பகுதியில் சுமார் 1.5 கி.மீ உயரத்தில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக கடும் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வேதாரண்யம் பகுதியில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் உள்ளனர். மேலும் கதிர்கள் தண்ணீரில் கிடப்பதால் அறுவடை செய்து, அதனை விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது.
மேலும் கால்நடைகளுக்கான வைக்கோல் கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே நெல் விளைச்சலில் ஏற்பட்ட இந்த இயற்கை பேரழிவிற்கு அரசு நிவாரணம் மற்றும் காப்பீடு நிறுவனத்தால் புதிய கணக்கு எடுத்து காப்பீடு தொகை வழங்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பாரத்துள்ளனர். இந்த மழையினால் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

