32 வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகூட்டம் கீழஈரால் நான்கு வழிச்சாலையில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாதம் 18.01.2021 முதல்17.02.2021 வரை சாலை பாதுகாப்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த சாலை பாதுகாப்பு மாதத்தில் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்துக்களை குறைப்பதை நோக்கமாக கொண்டு கடந்த18.01.2021 ஆம் தேதி முதல் தினந்தோறும் விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இன்று விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் எட்டையாபுரம் காவல்நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட கீழஈரால் பகுதியில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கூட்டத்தில் எட்டயபுரம் காவல் ஆய்வாளர் கலா, விளாத்திக்குளம் காவல் ஆய்வாளர் ரமேஷ் உடன் இருந்தார்கள். ஆட்டோ ஓட்டுனர்கள், லாரி ஓட்டுனர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு: எம். ஆத்திமுத்து
