மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தேசிய ஊரக வேலை திட்டத்தில் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்கவும் , நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாட்களாக உயர்த்தியும் , தினக்கூலியை 600 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் , 100 நாள் வேலைத்திட்டத்தில் சாதிவாரியாக சம்பளம் வழங்குவதை கண்டித்தும் நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் இளையபெருமாள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட சங்கத்தினர் கலந்து கொண்டனர்
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

