• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் விரலி மஞ்சள் பறிமுதல் – 2பேர் கைது

policeseithitv by policeseithitv
October 19, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் விரலி மஞ்சள்  பறிமுதல் – 2பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
எட்டயபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் விரலி மஞ்சளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் விரலி மஞ்சள், ஏலக்காய், வெங்காய விதை ஆகியவற்றுக்கு 100 சதவீத இறக்குமதி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இலங்கையில் சுங்க வரி ஏய்ப்புக்காகவும், கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காகவும் தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் இருந்து விரலி மஞ்சள், ஏலக்காய், வெங்காய விதைகள் உள்ளிட்டவைகளும், அந்த நாட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சா, பீடி இலைகள் ஆகியவற்றையும் படகுகளில் கடத்த முயற்சிப்பதும், அவற்றை போலீசார் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எட்டயபுரம் அருகே விரலி மஞ்சள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது தலைமையிலான தனிபிரிவு போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிந்தலக்கரை அருகே வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ நிற்காமல் சென்றது. இதனால் உஷார் அடைந்த போலீசார் விரட்டிச்சென்று அந்த சரக்கு ஆட்டோவை வழிமறித்து நிறுத்தினர். அப்போது அதில் இருந்து 2 பேர் தப்ப முயன்றனர்.
உடனே அந்த 2 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் சரக்கு ஆட்டோவை சோதனையிட்டனர். அதில் தலா 35 கிலோ வீதம் 37 மூட்டைகளில் விராலி மஞ்சள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சமாகும். இதையடுத்து சரக்கு ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் மதுரை நூல் சாலை இஸ்மாயில்புரம் 8-வது தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் ஹக்கிம் சுல்தான் (31), மதுரை நெல்பேட்டை கைமார் ராவுத்தர்தோப்பை சேர்ந்த நாகூர்மீரான் மகன் இப்ராஹீம் ஷா (36) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், தூத்துக்குடி கடல் பகுதி வழியாக படகு மூலமாக விரலி மஞ்சளை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சுமார் 1.5 டன் விரலி மஞ்சள் மூடைகளையும் பறிமுதல் செய்தனர்.
Previous Post

நண்பனை கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌ – தேனியில் பரபரப்பு

Next Post

தமிழ்நாடு பாராலிம்பிக் சிட்டிங் வாலிபால் சாம்பியன்ஷிப் – வீராங்கனைகளுக்கு கோவை மாவட்ட காவல் துறை பாராட்டு

Next Post
தமிழ்நாடு பாராலிம்பிக் சிட்டிங் வாலிபால் சாம்பியன்ஷிப் – வீராங்கனைகளுக்கு கோவை மாவட்ட காவல் துறை பாராட்டு

தமிழ்நாடு பாராலிம்பிக் சிட்டிங் வாலிபால் சாம்பியன்ஷிப் - வீராங்கனைகளுக்கு கோவை மாவட்ட காவல் துறை பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In