தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சமூகநீதி நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஜி சந்தீஸ், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம், சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர்கள் ரமேஷ்பாபு, ஆழ்வார், மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அலுவலர்கள் சுப்பையா, சங்கரன், சிவஞானமூர்த்தி, அலுவலக கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், கணேசபெருமாள், மாரியப்பன், மாரிமுத்து, ராபர்ட், மயில்குமார், சரஸ்வதி, அந்தோணியம்மாள், அருணாச்சலம், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

