டெல்லியில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், செப்டம்பர் 8-ம் தேதி முதல் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து டெல்லி கல்வித்துறை மந்திரி மனிஷ் சிசோடியா கூறியதாவது:-
செப்டம்பர் 1 முதல், அனைத்து பள்ளிகளிலும் 9-12 வகுப்புக்கான வகுப்புகள், அவர்களின் பயிற்சி வகுப்புகள் மற்றும் அனைத்து கல்லூரிகள்/பல்கலைக்கழகங்கள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் மற்றும் எந்த ஒரு மாணவரும் கட்டாயமாக பள்ளிக்கு வர வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தவில்லை.
மாணவர்கள் பள்ளிகள் வருவதற்கு பெற்றோரின் சம்மதம் அவசியம் என்றார். செப்டம்பர் 8-ம் தேதி முதல் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

