நாலுமாவடி புதுவாழ்வுச் சங்கம் சார்பில் பெண்களுக்கான முதலாம் ஆண்டு கபடி பயிற்சி முகாமினை சகோ.மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் சமுதாயப் பணிகளை ஆற்றி வரும் புதுவாழ்வுச் சங்கம் அமைப்பின் மூலம், பெண்களுக்கான முதலாம் ஆண்டு கபடி பயிற்சி 10 நாள்கள் முகாமினை தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபாடி கழக சேர்மனும், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனருமான சகோதரர் மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்து பேசினார். முன்னதாக எட்வின் சாம்ராஜ் ஆரம்பஜெபம் செய்தார்.
தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக் கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், பொருளாளர் ஜிம்ரிவ்ஸ், அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், குரும்பூர் காவல்நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். பயிற்சியாளர்கள் அசோக்குமார், அன்புமணி, தங்கவேல், ஜானகிராம், தினேஷ், சிவா ஆகியோர் பயிற்சிஅளிக்கின்றனர். விழாவில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப்பொதுமேலாளர் செல்வக்குமார், ஹெயின்ஸ் வெஸ்லி, மக்கள் தொடர்பு அலுவ லர் சாந்தகுமார், ஜேம்ஸ், ஜோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பயிற்சி முகாமில் சப்-ஜுனியர், ஜுனியர்,சீனியர் பிரிவுகளில் 110 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.இவர்களுக்கு 3 வேளையும் சத்தான உணவு வகை களை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனம் வழங்குகின்றனர். முன்னதாக பயிற்சியில் பங்கு பெறுகின்ற மாணவிகளுக்கு பேக், வாட்டர் பாட்டில் ஆகியவற்றை நnலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறங்காவலர் டாக்டர் அன்புராஜன் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை சகோதரர் மோகன் சி.லாசரஸ் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் மணத்தி கணேசன், எட்வின் சாம்ராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

