சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கோவை
மாவட்டத்திற்கு 18 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 18 மடிக்கணினிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 3 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 3 மடிக்கணினிகள் அனைத்து மகளிர் காவல் நிலையங்களான துடியலூர், பேரூர், பொள்ளாச்சி ஆகிய காவல் நிலையங்களுக்கும் மற்றும் துடியலூர். பெரியநாயக்ககன்பாளையம், மேட்டுப்பாளையம், அன்னூர், வடவள்ளி, பேரூர், மதுக்கரை, சூலுார், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, செட்டிபாளையம், பொள்ளாச்சி-கிழக்கு, பொள்ளாச்சி-மேற்கு, கோமங்கலம் மற்றும் ஆனைமலை ஆகிய 15 காவல் நிலையங்களுக்கும் 15 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 15 மடிக்கணினிகள் அந்தந்த காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண்காவலர்களுக்கு கோவை மவாட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகாசினி. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் மேற்பார்வையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் வழங்கி காவல் பணிகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
அவர்களின் பணியானது காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 100 லிருந்து வரும் அழைப்புகள், காவல் நிலையத்திற்கு வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்மந்தமாக வரும் தொலைபேசி அழைப்புகள் வந்தவுடன் மேற்படி பெண் காவலர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு சக்கர வாகனத்தில் மடிகணினியுடன் சம்பவ இடத்திற்கு சென்று மடி கணினி மூலம் சம்மந்தப்பட்டவர்களிடம் புகாரினை பெற்று உடனடியாக மேல் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்று உடனடியாக தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வயதானவர்கள் மாற்றுதிறனாளிகள் நேரில் வந்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்க முடியாத அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

