திருநெல்வேலி தாலுக்கா ரெட்டியார்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக 18 வயதுக்கு மேற்பட்டோர்கான
இலவச கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் சங்கர் நகர் இந்தியா சிமெண்ட் பழைய காலணியில்வைத்து . நடைபெற்றது
இந்த முகாமில் சங்கர் சிமெண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி கலந்துகொண்டு சிறப்பு முகாமை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டாக்டர்கள், ஜஸ்டின், சூர்யா மற்றும் சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், இந்தியா சிமெண்ட் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் சின்னத்துரை, மற்றும் இந்தியா சிமெண்ட் லிமிடெட் மனிதவள துறையின் சீனியர் மேலாளர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர். இந்த சிறப்பு முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட 100க்கு மேற்பட்டோர் பங்கேற்று தடுப்பூசி போட்டு பயன்பெற்றனர்

