தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர்கள் மற்றும் விற்பனை செய்தவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டு 2907 மதுபாட்டில்களும், பணம் ரூபாய் 6,700/- பறிமுதல் செய்யப்பட்டது.*
*சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்வதற்காக அதிக அளவு மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவர்களை கைது செய்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் தலைமையிலான தனிப்படை மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. முருகன் மற்றும் திரு. மாதவராஜா தலைமையிலான போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.*
*தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (11.05.2021) காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டதில் தூத்துக்குடியில் தென்பாகம் உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் தலைமையில் தலைமைக் காவலர்கள் திரு. பென்சிங், மாணிக்கம், சாமுவேல், செந்தில்குமார், மகாலிங்கம், முத்துப்பாண்டி மற்றும் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தென்பாகம் காவல் நிலையத்திற்குட்பட்ட அண்ணாநகரில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த அண்ணாநகரைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் கிருஷ்ணன் என்ற கண்ணன் (23) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 1872 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.*
*அதே போன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் திரு. முருகன் மற்றும் திரு. மாதவராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் ரோந்து சென்று வரும்போது சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 5 பேரைக் கைது செய்து அவர்களிடமிருந்த 885 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.*
*மற்றும் தூத்துக்குடி வடபாகம், தெர்மல்நகர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி மேற்கு, எட்டயாபுரம், தட்டார்மடம், தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு ஆகிய காவல் நிலையங்களுக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டதில் 11 பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 150 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


