நெல்லை மாநகரில் கொரோனா வைரஸ் நோய் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசால் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு நாளான நேற்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷ்னர் அன்பு உத்தரவின் பேரில், நெல்லை மாநகர காவல் துணை கமிஷ்னர் ஸ்ரீனிவாசன் தலைமையில், நெல்லை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் தற்காலிக சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தொடர் தீவிர கண்காணித்தனர்.மேலும் ஊரடங்கின் போது மக்கள் யாரும் தேவையின்றி சுற்றுவதை டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு காவல் துணை கமிஷ்னர் ஸ்ரீனிவாசன் வழங்கினார் உடன் டவுன் உட்கோட்ட காவல் உதவி கமிஷ்னர் சதீஸ்குமார் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

