தேவகோட்டையில் முகக்கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என வட்டாட்சியர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டாட்சியர் ராஜரத்தினம் தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் செல்வகுமார் மற்றும் தாலுகா ஆய்வாளர் சுப்பிரமணியன் இவர்கள் தலைமையில் தேவகோட்டை நகர் தியாகிகள்ரோடு, வாடியார்வீதி, தினசரி காய்கறி கடைகள்,
பஸ் ஸ்டாண்ட்டு, திருப்பத்தூர் சாலை, ஆகிய பகுதிகளில் வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் முக கவசம் அணியாதவர்களுக்கு கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அவர்களிடமும் அபராதம் விதித்தனர்.
மாவட்ட செய்தியாளர்
தேவகோட்டை கண்ணன்


